வசந்தம் கலைந்தது.

கூட்டமாக
கூடிப் பறந்தோம்
வாழ்வைத் தேடி..
விடியல்
ஒன்றுக்காக
விடுலை வேண்டி
பறந்தோம்…
தேடித் துயர்
ஆடிக் களைத்தது.
கூட்டையும் கலைத்தது..
இருப்பையும்
தொலைத்து
விருப்பையும்
கருக்கியது..
திசைகள் வேறாகி
பாஷைகள் புரியாத
தேசங்களில் தொங்கினோம்..
நொந்த மனங்களில்
வேதனைகள் கூடுகள்
கட்டின.வாழ்க்கையும்
வனாந்தரமானது…
நொந்த குரலின்
சிந்து கேட்கிறதா..
இறக்கை முறிந்த
வானம் பாடிகளானோம்…

 

தயாநிதி