வரன்!கவிதை கவிஞர் தயாநிதி

 

பாலை
வனத்தில்
பருவங்கள்
பாழ் பட
வருந்தி
உழைக்கும்
அழகிய
வரனே..

வருட
மறந்ந
வசந்தங்கள்
வதைக்கும்
கொடும்
வேதனைகள்
வளம்
எனும்
சொல்லோடு
வழி
தேடுகின்றாய்..

காத்திருப்பின்
கனிவு
காணலாய்
காற்றோடு
கை குலுக்கி
கோடையின்
கொடூரத்தில்
தாகம்
தீராப் பசியில்
நான்….

வருட
வாழ்த்து
சொல்லிட
நேருடும்
நினைவுகள்
கூடிக்
கும்மியடிக்கிறது
என்னோடு…

உன்னோடு
கை கோர்த்து
கோவில்
தரிசனம்
எட்டாமல்
எள்ளி நகைத்திட
மருத்து நீராடி
என் சுகம்
காண்பேனோ…
நான்..

வந்துவிடு
பாலைவனமாகும்
ஆசைப் பயிருக்குo
அன்பு நீரூற்றிட
ஆசையோடு
வருவாயா…
கட்டோடு
கருவாடாகிய
வாழ்வின்
தொனியை
தணித்திடுவாயா…
மறந்து விட்டேன்
புத்தாண்டு
வாழ்த்துக்கள்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி