வருவார்கள்..!கவிதை கவிஞர் தயாநிதி

கேள்விகள்
ஏராளம்..
பதில்கள்
தெரிந்தும்
விடையில்லை….!

வீடுகள்
தோறும்
தோன்றா எழுவாயக
தொக்கு
நிற்கும் அப்பா
வருவாரா?

அண்ணண்
அக்கா
தம்பி தங்கை
மாமா என
நீண்ட கேள்வி
வருவார்களா?

அரசும்
ஆமியும்
கடவுளும்
ஒரே ஜாதி
பதில் பேசாத
முண்டங்கள்..!

மனிதப்
பிண்டங்களை
திண்டு ஏப்பம்
விட்ட கூட்டங்கள்.
ஆட்டம்
அடக்கிட
பிள்ளைகள்
வருவார்கள்…!

சாப்பிடு
நாளை சாவே
உனக்கும்
சாப்பாடாகும்
இப்போது
சாப்பிடு..!

விரக்தியை
விரட்டு..
சக்தியை
திரட்டு..
சத்தியத்தை
நம்பு. விடியல்
சாத்தியமாகும்..!
படம். நன்றி
வதனி ரட்ணகுமார்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி