வருவாளா!கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

அழகென்று
ரசிப்பதா..
ஆனந்த ராகம்
மீட்கவா….

நிலவைக்
கண்டு நான்
நெகிழவா…

நிலையில்லா
வாழ்வினை
இரசிக்கவா…

கனியாத
காதலால்
கசிந்து நான்
உருகவா…….

பூக்காத
மரமுண்டா
இல்லை கனியாத
காயுண்டா என
தேற்றவா….

இருள்
கவ்வும் மாலைப்
பொழுதின் நிலை
மாறிடுமா.

மனதோடு
நீளும் இருள் கலைய
முழு நிலவாக
அவள் வருவாளா..

Merken