வரை படம்..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

நிரை நிரையாக
கோடுகள்
மாறாத வடுவாக
தழும்புகள்.

மரித்துப்போன
மனிதத்தின்
எச்சங்கள்.
வதை முகாம்களில்
சித்திர வதைகள்.

தனக்கான
தேசத்தில்
சுதந்திரமாக
மூச்சு விட
முனைந்த
வனிதைகள்.

கட்டவிழ்த்த
அராஜகத்தின்
அடையாளங்கள்.
நிர்வாணமாக்கி
வரைந்த
வரை படங்கள்.

உலகத்தி.ன்
மூலையில்
உதிக்கப் போகும்
உன்னத நாட்டின்
மாதிரிப் படம்.

சத்தியம்
ஜெயிக்கும்
சாத்தியக்
கோடுகள்..

அசாத்தியமாக
இருத்தலை
நிறுத்தி
நிமிர்வோம்
தழும்புகளுக்கு
ஒத்தடம்
தேச விடியல்
ஒன்று தான்