வானமும் வாழ்வும்!ஆக்கம் இணுவை சக்திதாசன்கவிதை இணுவை சக்திதாசன்

 

இளவேனிக்காலம்
தொடக்கி விட்டாலே
டென்மார்க்கில் ,,,,,.
வானமும் வாழ்வும்
வெளித்துப் போய் விடும்

நேற்றைய தினம் Roskilல்
ஆரம்பமான கோடைகால ….
தொடக்க விழாவில்
கெலி கொப்படர் ஊர்வல காட்சி ….

பனியகன்று
மரங்களெல்லாம்
இலையில்லா பூக்களோடு
வாசனை மூக்கை துளைக்க
ஊருக்கு ஊர் கொண்டாட்டம்

ஆடை களைந்து
பட்சிகள் கூட்டம் கூட்டமாய்
எங்குமே ஆர்ப்பாட்டம்

இறைச்சியும் வாட்டி
பியூட்டியான சுற்றுலாக்களும்
ஊருக்கூர் களியாட்டு விழாக்களும்

சூரியனே ஆழகுதான்
மறைய மறுத்து
இரவிரவாய்
வானில் கோலமிடும்

வண்ணங்களில்
வாழ்வே கோலமிடும்
வானமும் வாழ்வும்
வெளித்துப் போய் விடும்

ஆக்கம்  இணுவை சக்திதாசன்