வாழ்த்துகிறேன் உங்களைகலைஞர் கு.யோகேஸ்வரன்.

இளம் கலைஞர்களையும் அன்போடு சேர்த்தெடுத்து இனிதே நடந்த விழா பற்றி அறிந்து சிறப்புக்கண்டுஎன்மனம் மகிழ்ந்தது ,

யேர்மனி டோட்முண்ட் நகரில் ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்கள் இணைந்து சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழா   எம்மவர்களின் அறிவு கண்களை மெல்ல திறந்து வைத்து, பின் இசையால் வசமாக்கி வாழ்வாங்கு வாழும் இந்தச் செயல்பாட்டுக்குழுவுக்கு

அதாவது ஆனைக்கோட்டை இணையம்,எஸ் ரி எஸ் ஸ்ரூடியோ எம்.எஸ்.மீடியா ஆகிய ஸ்தாபனங்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக் கலைவிழாவின்  இயக்குனர்களுடன் அண்ணா தேவாவுக்கும் எனது நல் வாழ்த்துக்கள் இந்த தகவலைstsstudio.com இணையத்தை பார்த்து மகிழ்ச்சி பெற்று மகிழும் நல்.. நெஞ்சங்களுக்கும்.வாழ்துடன் வந்துள்ளேன்

எனது பெரும் மதிப்புக்குரிய பாசையூர் திரு.ஜேசுதாஸ்அவர்களுக்கும் ,

திரு.ஏலையா முருகதாஸன் அவர்களுக்கும்,

திரு.பொன் சிறீ ஜீவகன்அவர்களுக்கும்,

சிறந்த குரல் திறனால் அறிவிப்பு துறையில் அனைவரின் உள்ளத்தில் வாழும்அண்ணா மணிக்குரல் தந்த திரு.முல்லைமோகன் அவர்களுக்கும் ,

திரு.மரியறொக் அவர்களுக்கும் மதிப்பளித்து கெளரவித்த சிறப்பை நிழல்படத்தில் பார்த்தேன் மகிழ்ச்சி ஆனந்தம் கொண்டேன் உங்கள் சிறந்த பணிக்காய் நிறைந்த மனதுடனே வாழ்த்துவதிலும் மனநிறைவு கொள்கிறேன்,

இந்தச் செய்தியை தாங்கிவந்து என்னை உங்களுக்காய் எழுதவைத்தstsstudio.com இணையத்தாருக்கும் உங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளை தங்கள் பொற்பாதங்களில் வைத்து..வாழ்த்திக்கொள்கின்றேன்,

தரணியில் தங்கள் பணிசிறக்க
இறைவனை வேண்டுகிறேன்..
இன்புற்று கலைக்காய் உழைக்க
உங்களைவேண்டுகிறேன்..

பண்புற்ற கலைஞர்களாக
நீங்கள் வாழ்ந்ததால் பட்டமளித்து
உங்களைப்பரவசப்படுத்திய
நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்

உங்கள் பணிகண்டு பலர்முன்
வாழ்தி திறன் அறியவைத்தசிறப்பு
நற் சிறப்பு இது
வாழ்த்துதலுக்குரியது

கலைஞர்கள் என்பவர்கள்
அந்த அந்த காலத்தில்
கௌரவிக்கப்படுவது அதுவும்
வாழும்போது கௌரவிப்பது
அந்தக் கௌரவிக்கப்பாளர்களின் சிறப்பு

அதனால்
அனைத்து கலைஞர்களுக்கும்
மீண்டும் மீண்டும் எனது
அன்பான வாழ்த்துக்களை
உங்கள் பாதங்களில் வைக்கின்றேன்.

அன்புடன் கலைஞர்
கு.யோகேஸ்வரன்.