வாழ்த்துவோம்..

கலைஞனாய்
அரிதாரமில்லாத
அவதாரம்

சாரம்
நிறைந்த
பெரு வாழ்வு.

இலகுவாானதுமல்ல
இலவசமானதுமல்ல
இதய சுத்தியுடனானது..

இதயங்களை
ஈர்க்கும்
இடர் துடைக்கும்.
பணியிது.

மண்ணை
மக்களை விடியலை
எழுச்சியை
புரட்சியை வளர்க்கும்
விடுதலைப் பணி.

கலைப்பணி
இறை பணிக்கு
ஒப்பானதென்பர்
இன்றைய தினம்
எம்மை வாழ வைக்கும்
நாடக தினமாமே.
அனைத்து நாடகக்
கலைஞர்களுக்கும்
வாழ்த்துக்கள்.

மூத்தகலைஞர் கவிஞர் தயாநிதி