வாழ்ந்தால்…கவிஞர் தயாநிதி

உயரமானது
எண்ணங்களினால்
உயரமானது.

உறுதியானது
மனிதனை விட
உறுதியானது..

வளமானது
மனிதனுக்கு
வரமானது.

தன்னலமறியாத
தாரள மனம்
கொண்டது.

வளர்ந்த
மண்ணையும்
வளர்த்தவனையும்
மறவாதது..

அனர்த்தங்கள்
கண்டும்
அரக்காதது..

போர்க்காலத்தில்
ஊரையும் ஊர்
மக்களையும் காத்த
கடவுளானது…

மடிந்தாலும்
வாழும் வரம்
பனை மரத்துக்குண்டு..

மரம் நடுவோம்
உரமிடுவோம்
வாழ்ந்தால் பனை
போல வாழ்வோம்
தரம் மிக்கவராக
நிமிர்வோம்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி