விதை….

முளையாகி
துளிராகி
தளிராகி
செடியாகி
கொடியாகி
மரமாகி
பூவாகி
காயாகி
கனியாகி மீண்டும்
மீண்டும்
விதையாகி…..
பஞ்ச
பூதங்களுடன்
போராடி
கலையாமல்
குலையாமல்
இடம் பெயராமல்
பெயரந்தாலும்
குணம் மாறாமல்
பெயர் மாறாமல்
நிறம் மாறாமல்
நன்மை தரும்
தாவரங்கள் என்றுமே
உயர்வானவையே…..
உயிருண்டு
உயர்ந்த குணமுண்டு
மதமில்லை
மதம் கொண்டதில்லை
வகுப்புவாத
வெறியில்லை
இனமுண்டு
இனவாதம் பேசியதில்லை.
பேருண்டு
போரில்லை.
மனிதன்
மட்டும் மாறானவன்
சுரண்டுவதிலும்
அண்டுவதிலும்
அழிப்பதிலும்
ஆர்வமாகி போட்டி
பொறாமை போராடி
தானும் அழிந்து
அடுத்தவனையும்
அழித்து மனித
அடையாளங்ளை
தொலைத்து
தொலைந்தே போகின்றான்
மரம் செடி கொடிகளை
பார்த்தும் மாறாமலே

ஆக்கம் கவிஞர் தயாநிதி