விருட்சங்கள்..!!கவிதை கவிஞர் தயாநிதி

 

சாவின்
விளிம்பில்
நின்றாலும்
தாயின்
மானமும்
தன்மானமும்
பெரிதென
எண்ணும்
பிள்ளைகளே
புரட்சியாளராகின்றனர்.

எழுச்சிக்கு
AK 47 ஐயும்
எதிர்க்கும்
சக்தி
எங்கிருந்தோ
எழுந்து விடும்..!
விரக்திக்கு
சாவு மணி
அடிக்கும்
எதிரியின்
வேட்டையில்
இலக்கின் வேகம்..!

இனத்தின்
விடியலில்
இனம் புரியாத
பற்று கொழுந்து
விட்டெரியும்
மண்ணும்
மக்களும்
விழியிலும்
மனங்களில்
உறுதியும்
ஊற்றாகும்
விடுதலை
நோக்கி கால்கள்

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken