விலாசம்.!கவிதை கவிஞர் தயாநிதி

சாமியின்
பெயரால்
பூமியில்
குளப்பம்..

எண்ணங்கள்
சுருங்கியதால்
அவ நம்பிக்கை
நீள்கின்றது..

வேடிக்கையின்
பேரால் எங்கும்
வேதனைகள்
பெருகுகின்றது..

உணர்வுகளை
மறைத்து வந்தோம்.
உண்மைகளை
தொலைத்து வந்தோம்.

உரிமைகளை
இழந்து வந்தோம்.
மடமைகளை
சுமந்து வந்தோம்..

வெளி நாட்டு
வீதிகளெல்லாம்
விலாசம் காட்ட
தேங்காய்களை
வீணாய் சிதைக்கிறோம்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி