விளைவு !கவிதை கவிஞர் தயாநிதி

 

இயற்கை
தரும் சுகங்களை
சுவீகரித்தோம்..

இயற்கையை
ஒரு காலத்தில்
வணங்கினோம்…

வசதிகள்
பெருகிட செயற்கையில்
காதல் கொண்டோம்…

சந்தர்ப்பவாதிகள்
மின்சாரம் வந்ததும்
வழி மாறினோம்.

குளிரூட்டி
மின் விசிறியின்
வருகையில் ….

வசந்தம்
கண்டோம்.மர
நிழல் மறந்தோம்..

மரம் நட
மறந்தோம்
நீர் விரையம்
செய்தோம்…

தோட்டம்
தொலைத்தோம்
மாளிகை அமைத்தோம்..

மனமும்
வறண்டு
மண்ணும் வறண்டு
இன்று நம்
வாழ்வும் வறண்டது..

ஆக்கம் கவிஞர்தயாநிதி