***வெண்மதி நாணியது***

நிலவே நானும் உந்தன்
_வருகையத்தேடி,
நீண்டநேரம் காத்திருந்தேன்
_என்மனம் வாடி.
நீலவான் காரிருளானது,
_வான் இருண்டோடி.
நீயில்லாத என்னிதயம்போல
_ ஓர்சிலநொடி
நிசப்தமாகி வெறித்திருந்த
_ கதை கேளடி.
நீலவேணி உன் கொலுசின்
_ஒலி கேட்டிட,
நின்மதியாகி நானும் மலர்ந்து
_திரும்பிட
நிலவொன்று என் பின்னால்
_ஒளிர்த்திட
நீயோ என் முன்னால் வந்து
_ ஜொலித்திட ,
நின் மதிமுகம் கண்டு அந்த
_வெண்மதி நாணிட,
நிதர்சன அழகுகண்டு நானுமோ
சிரித்தேன் பூரித்திட.
இதயநிலா நேசன்