வெள்ளியிலே விளக்கேற்று…!கவிதை.ரதிமோகன்

வெள்ளியிலே இல்லம் பெருக்கி
விளக்கேற்றி குலம் வாழ தொழும்
தெய்வப்பிறவியடி நீ பெண்ணே..

மஞ்சள் குளித்து கார்க்கூந்தல்
தண்ணீர் சொட்ட சொட்ட
அள்ளிமுடிந்து தீபத்தோடு
நீ வரும் வேளை…

அலைமகளும் அருள்வழங்க
அலைமோதிய மகிழ்ச்சியில்
கொண்டவனும் கண்மயங்க…

புலரும் இனிய பொழுதுகள்
புன்னகையாய் பூக்குமடி
பெண்ணவளே உன்
அன்பாலே…

புத்தம் புது மலராய்
தினம் தினம் நீ
மலர்ந்திடு ..

பொங்கும் இன்பம்
நீ வாழும் இல்லம்
மாறும் நாளை
தேவதை வாழும் ஆலயமாய்…

ஆக்கம் ரதிமோகன்