ஸ்காபுறோவில் உள்ள மன்றத்தின் கலா மண்டபத்தில் கனடாவில் கடந்த 25 ஶ்ரீ தியாகராஜ இசை உற்சவம்“ வருட நடைபெற்றது.

கனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் இசைக் கலா மன்றம் நடத்திய வருடாந்த “ ஶ்ரீ தியாகராஜ இசை உற்சவம்“ கடந்த சனி ஞாயிறு தினங்களில் – 20ம் 21ம் திகதிகளில்- ஸ்காபுறோவில் உள்ள மன்றத்தின் கலா மண்டபத்தில் நடைபெற்றது.

20ம் திகதி காலை தொடக்கம் மாலை வரை இளம் கலைஞர்கள் மற்றும் சிரேஸ்ட கலைஞர்கள் என பலரின் இசைக் கச்சேரிகள் நடைபெற்றன.
21ம் திகதியும் ஶ்ரீமதி குலநாயகி விவேகானந்தன் , ஶ்ரீமதி பிரசாந்தி மற்றும் திரு வர்ணராமேஸ்வரன் ஆகியோரின் கச்சேரிகள் இடம்பெற்றன.

அவர்களுக்கு பக்கவாத்தியக் கலைஞர்களாக சிரேஸ்ட கலைஞர்கள் ஶ்ரீமதி தனதேவி மித்திரதேவா (வயலின்) திரு வாசுதேவன் இராஜலிங்கம் (மிருதங்கம்) உட்பட பலர் மேடையில் தங்கள் பங்களிப்புக்களை வழங்கினார்கள்.

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்