உங்களில் ஒருவன் முல்லைமோகனுக்கு வாழ்த்துரை

ஜேர்மனியில் நடைபெற்ற
“ கிராமியப் பூபாளம் “
நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட
எமதன்புச் சகோதரர் ,
நற்றமிழ் அறிவிப்பாளர்
திரு. மோகனதாசன் நாகராஜா அவர்களின்
சிறப்பாற்றலை மெச்சி ,
யாழ். “ மணிக்குரல் “
விளம்பர சேவையின்
வழி வந்து , தனது
முயற்சித் திறமையினால்
பல வருடங்களுக்கு முன்னரே , புலம்பெயர் மண்ணில் , பற்பல நிகழ்ச்சிகளில் மிகச்சிறந்ததோர்
அறிவிப்பாளராக நிமிர்ந்து ,
தனது திறமையினை
நிரூபித்தவருக்குத்
தகுந்த கௌரவிப்பு
வழங்கப்பட்டிருப்பதைக்
காணும் பொழுது ,
மனம் மிக மகிழ்கின்றோம் !
வாழ்த்துகின்றோம் !!
பாராட்டுகின்றோம் !!!
“ அன்பே இறைவன் “
“ சத்தியமே ஜெயம் „

Merken

Merken

Merken