மாயங்கள் ஏனோ.?

 

இதமாக தொட்டுச்செல்லும்
பூங்காற்றே
என்னை தொட்டு எழுப்பியதேனோ
மாயங்கள் ஏனோ
என்னுள் தவிப்புகள் ஏனோ
பார்வைபட்டதால்
மயக்கம் ஆனேன்
புன்னகையால்
புதுமையானேன்
உந்தன் கட்டழகால்
மெய் மறந்தேன்
அருகில் வந்ததால்
சிலிர்த்துப்போனேன்
மொத்தத்தில் நான்
பித்தன் ஆனேன்
காதல் வலை வீசி
இதயத்தில் சிக்கிய
பெண் மீனே
என் சுவாசமே நீ
அல்லவா
தடங்கள் மாறி போனாலும்
தடயங்கள் மாறி போகாதடி
உன் முகவரி இல்லை
என்றாலும்
காதல் முகவரி
மட்டும் நம் இதயத்தில்
நினைவுகள் துளியாக
கவிதை துளிகள்
மீண்டும் வரும் வரை
என் தேடல் நீயடி
கவிதாயினி சுபா வசத்