கலை மகன்

முல்லைத் தீவில்
முகிழ்த்த கலைக் கொடி
குமாரு .யோகேஸ்.

பட்டறை பயிற்சி
முடித்த கலை வித்தைகள்
கற்று தேறிய கலை மகன்.
முற்றிலும் முழுமையானவன்.

மண்ணிண் மீட்பிற்காய்
தன் படைப்புகளோடு
களம் நின்ற பெரு மகன்.
ஓயாத திருமகன்

போரோடும்
போரோய்ந்த
பின்னாலும்
தாயகத்தை
தளமாக்கி கலையோடு
அலைபவன்.

பள்ளிகள் தோறும்
பட்டறைப் பயிற்சிகள்
கொடுத்து வீதி
நாடகங்களால்
செய்திகள் சொல்பவன்.

போதையின் வாதை
பாலியல் கொடுமை
கலாச்சார சீர் கேடுகள்
இவன் படைப்பில்
மையப் பொருளாக்கி
ஊதியமின்றி உழைப்பவன்..

கரம் கொடுப்போம்
உரமிடுவோம்.விரைவில்
வெளி வரவிருக்கும்
நோர்வே தமிழன் தயாரிப்பிலும்
இயக்கத்திலும் உருவான
முழு நீளப் படத்திலும்
பாதிரியாராக வேடம்
ஏற்று நடித்தவனை
வாழ்த்துவோம் வாருங்கள்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

 

Merken