****கடலடி ****கவிதை கவிஞர் கவிநேசன்

காதல் தேவதையோ
கடல் நண்டோ எனும்
கண்ணாம் பூச்சிக்
கதையின் முடிவில்
கடல் நண்டே
கதாநாயகியானது
கனகச்சிதம் .
கடலலையும்
காற்ரொலியின்
கலகல ஓசையும்
காதுகளில் விழ
கடற்கரைக்
கனவுகள் பல
களைகட்டி எழ
கண்கள் பனித்தன.
கதை படித்த
காந்தக்குரலோனுக்கு ஒரு
காட்டியணைப்பு.
கவிதையோடு
கதையைக்
கலந்து
காட்சிமயமாய்க்
கண்முன்னே தந்த
கவிஞனுக்கு பெரும்
காரவொலிகள்.
கவிதையில்
கதை உண்டு
கவிநாயமும் உண்டு
கரு விதையும் உண்டு
கவி +கதை+ விதை
கவிதை
.
கவிநேசன்

Merken