கடலின் அலை !கவிதை ஜெசுதா யோ

கடலின் அலை அடித்து
மீனுக்கு வலித்ததில்லை
உன் நினைவலைகளால்
என் இதயத்திற்கு
என்றும் வலியில்லை…//

இருப்பதோ ஒரு இதயம்
தந்துவிட்டேன்
அதையும் உனக்கெனவே…//

என்னிடம் இருப்பதோ
உன் நினைவுகள் மட்டுமே
அதை என்றும்
திருப்பிடப் போவதில்லை நானே…//

இறந்தாலும் உயிர் வாழும்
உன் நினைவோடு
என் ஆத்மா…///

என்னை நீங்கி நீ வாழ்ந்தால்
உனக்கு சந்தோசம் என்றால்
இன்றைய பொழுது இறுதியாகட்டு
உன் சந்தோசம் மட்டுமே
என் சந்தோசம்…///

நிஜங்களை விட
நினைவுகள் இனிக்கிறது
வாழும் வரை
அந்த நினைவுகள்
எனக்கு சுகமே…//

                                                                             ஆக்கம் ஜெசுதா யோ