காலங்கள் எமக்காக காத்திருப்பதில்லை

என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளைத்
தொட்டுக்கேட்டேன்
இப்போது நீயெங்கேயென்று
நீ சொல்லப் போகும்
அந்த வார்த்தைக்குள்
அடங்கியிருக்கிறது
என் கடைசி முடிவு
காலங்கள் எமக்காகக்
காத்திருப்பதில்லை
இறந்த காலத்தை நீயும்
கேட்டுத் தெரியும்
நிலமை வந்தால்
உன் கண்கள் மட்டும்
தனியாகத்தான்
கண்ணீர் வடிக்கும்

.
அருள் நிலா வாசன்