அவைத்தென்றல் திரு.வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களது நுண்கலை ஒளிஓவியம்

நகைச்சுவைத் தென்றலாய் எம்மிடையே மலர்ந்த மாபெரும் கலைஞரின் வாழ்த்துக்களையும் பல அபிமானிகள் தாயகத்தில் ஏழ்மைநிலையில் வாழும் செல்வங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் நன்றிகளையும் உள்வாங்கி மேலும் தனது டிஜே கரோக்கி இசையால் அவ்வப்போது வருகின்ற வருவாயை ஏழைகளுக்கு உதவும் பொருட்டு தொடர்ந்து பணியாற்றி வரும் கலைகளுக்கு பெயர் சூடிய அளவையம்பதியில் உதித்த எங்கள் அவைத்தென்றல் திரு.வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களது நுண்கலை ஒளிஓவியம்அவைத் தென்றல்
திலகேஸ் Germany.
…………………………...
அறிவிப்பாளனுக்குரிய
அனைத்து ஆளுமைகளும்
அடங்கிய அன்பழகன்.
அவைத் தென்றலென
விருது பெற்ற பெரும் கலைஞன்..

மனித நேயம் கொண்ட
மகத்தானவன். மண்ணில்
பாதிப்படைந்த பலரை
பாதுகாக்கும் பண்பாளன்..

உழைப்பின் ஒரு பகுதியை
ஊருக்கனுப்பி உதவும் சீராளன்
தான் இயக்கும் டிஜே இசை நிகழ்வுகளில்
கிடைக்கும் வருவாயனைத்தையும்
ஈழத்து இசைக்கலைஞர்களுக்கு
வழங்கி வாழும் தயாளன்…

கம்பீரக் குரலோன்
தனித்துவமான தொகுப்பு.
தயவும் பக்தியும் இளையோரை
வளர்க்கும் பண்பும்
பாராட்டுக்குரியது..இத்தகைய
கலைஞர்களை மேலும்
ஊக்குவிப்பது எம் பணியாகட்டும்.
வாருங்கள் வாழ்த்துவோம்…