குறைகளும் நிறைகளே… கவிதை கவிஞர் தயாநிதி

பொய் என்பது
பொய்க் காலிலும்
இருப்பதை
விரும்பாத மனிதர்கள்.

பார்ப்பவர்
கண்களுக்கு
இவர்கள் ஊனம்
காட்சியாகலாம்…

அது பார்த்தவன்
மனங்களில்
தேக்கிய ஊனத்தின்
உற்பத்தியாகும்..

உழைப்பினை
நம்பும் உன்னதர்கள்
உலகினில் வாழும்
தகுதியுள்ளவர்கள்..

ஊன்று கோலின்
பேருதவியுடன்
மெய்யை வருத்தி
மெய்யாய் வாழ்பவர்கள்..

வருந்த வேண்டாம்
வாழ்த்துங்கள்
திருட வேண்டாம்
திருந்துங்கள்..

காலக் கண்ணாடி
கண்களின் முன்னாடி
குறைகளும் நிறைகளே
இவர்களே இறைவனின்
பிள்ளைகளாகின்றனர்.

ஆக்கம் கவிஞர் தயாநிதி