வேம்படியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை நடத்திய விவேகானந்தர் விழா கல்லூரியின் தம்பையா மண்படத்தில் நடைபெற்றது. கல்லூரியின் இந்து மன்றத் தலைவர் மதுராங்கி நந்தகோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் வேணுகா சண்முகரட்ணம் முன்னிலை வகித்தார். பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் கலந்து கொண்டார். விவேகானந்தரை மையப்படுத்தி மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.