அகத்தேடல்

அன்றலர்ந்த உன் முகத்தை பார்த்துவிட ஆசை
அன்போடு தினம் தினம் குலாவி வர ஆசை
இன்பமாய் உன்னுடன் பேசி விட ஆசை
இதயத்துள் உன்னோடு இணைந்துவிட ஆசை

அகத்தேடல் உனக்காக மலர்கிறது
ஆனாலும் உன் அகம் தெரியவில்லை
புறத்தேடலாய் உன் உள்ளம் புரிந்தேன்
பூவே உன் வாசம் நான் தானே!

தென்றலாய் என் மேனி தழுவ வந்த தேனே!
மன்றிலே மழைமுகிலாய் மனு கொடுத்தாய்
அகத்திலே உன் காதல் துளிர்த்து எழுகுது
அன்போடு அணைத்திட வந்திடு தென்றலே!

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்