அனிச்சம் மலரல்லவா…

அனிச்சம் மலரல்லவா…
தென்னம்பூக்களாய் விரியும்
புன்னகைக்குள் எனை
தொலைத்துப்போகும்
இந்த சாகசம் ஏதடா..?
சக்கரைப்பொங்கலாக
தித்திக்கும் உன் வார்த்தைகள்
திராட்சைரச முத்தம் தொட்டு
சுவைத்திடும் மர்மம்தான்
ஏதடா…
அத்திப்பழ கன்னங்களில்
நாணமிட்ட கோடுகள்
கண்டும் இந்த நாடகம்தான்
ஏனடா நான் அனிச்சம்மலரல்லவா…?
ரதிமோகன்