அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட பரீட்சையில் சித்திபெறுறவாழ்த்துக்கள்

அன்பான அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட மாணவசெல்வங்களே!
இன்று நடைபெறும் அனைத்துலக தமிழ்மொழி பொதுத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவமணிகள் அனைவருக்கும் இப்பாடசாலை ஆசிரியர்கள் 
பரீட்சையில் சிறந்த சித்திகளைப்பெற,
தமது அன்பான வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் மிகமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்ற னர்!
இவ்வேளை, தமிழ்மொழியை எம் சிறார்களுக்கு தமது வேலைப்பளுவிற்கு மத்தியிலும் சிரமம் பாராமல் வாரந்தோறும்
அதற்கென நேரம் ஒதுக்கி அயராது அரும்பாடுபட்ட ஆசிரியர்களுக்கும்,
எதிர்காலத்தில் தம் சந்ததியினர் நம் தாய்மொழியை, தமிழர்கலாச்சார பண்பாட்டை விட்டு நழுவிவிடக்கூடாது என்ற உறுதியுடன் தம் குழந்தைச் செல்வங்களை அழைத்து வந்து கற்கைநேரம்முடியும் வரை பொறுமையுடன் காத்திருந்து அழைத்துச்செல்லும் அன்பான பெற்றோர்களுக்கும் தமது சிரம்தாழ்த்திய பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் ,
அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட நிர்வாகத்தினர்!!!
வாழ்க! வளர்க! எம் தாய்மொழியாம்!
தமிழ் மொழி!
நன்றி!!!