அன்புள்ள …….?

அறிமுகமே இல்லாமல் திடீரென நடந்த
அவசர கலியாணம் எனக்கு .
அப்பா அம்மா கூறிய காரணம்
அழகான வெளிநாட்டு மாப்பிள்ளை.
அன்று முழுநாளுமே கலியாண ,
அமளி துமலி,பேசவே நேரமில்லை.
அலங்காரத்தின் நெருடல்களினால்
அவரை முழுமையாய் ரசிக்கவில்லை.
அறைக்குள் தள்ளி தாளிட்டாலும்
அசதியின் உச்சத்தில் முதல்த் தனிமை,
அதிகாலைக்கு முன்னரே விருந்தாளிகள்
ஆராவாரம் கூச்சல் கும்மாளம் கிண்டல்கள்
அயல்நாட்டு உறவுகளின் பிரியாவிடை
ஆளுக்கொரு கதை கேட்டு சிரிப்பு வேறு.
ஆசைக்கணவுகள் எல்லாமே எந்தன்
ஆழ்மனத்திலேயே விழித்திருக்கிறது.
அதற்கிடையில் நாலாம் சடங்காம்,
ஆடு கோழி வெட்டி பெரும் சமையல். ஆளைஆள் பேசவிடாது விருந்து படைக்கும்
அல்லோல கல்லோலம் வெறுத்துப்போனது
அடுத்தநாள் விடியலென்பது எனக்கு
அடிக்கொருமுறை வருவதுபோல பிரமை.
ஆர்ப்பாட்டங்கள் ஓயமுன்னமே
அவரும் நாடுத்திரும்பும் நாள் வந்தது.
ஆசைக்கனவலைகளில் ஒரு துளிகூட
அரங்கேறவில்லை இன்னும்,
அதற்குள் நாம் பிரியும் நாள் வந்தது.
ஆசைகள் ஒருநாளும் வற்றாது
ஆற்றுவெள்ளத்தை எப்போதும்
ஆழி வந்து விழுங்கிவிடாது என்று
ஆறுதலை எனக்குநானே கூறிக்கொண்டு
அமைதியாக காத்திருக்கிறேன்.
அன்பான என்னவருக்கு நான் வரையும்
அன்பு மடலும் முதல் மடலும் இது.
அன்புள்ள ?…?…?..???.???.??
அடுத்த சொல்லின்றி தேடுகிறேன்
அவரை எண்ணித் தவிக்கிறேன்.
பிரிவு நேசன்