அப்படியே இருக்கிறது….

ஆலயமணிகள்
ஒலித்துக்கொண்டே இருந்தது
அதனிடையே அழுகுரல்கள் கேட்டதனால்
உற்றுக்கேட்கத் தவறிவிட்டோம்

பறவைகள் பாடிக்கொண்டே
இருந்தன
பாரினிலே போர்முழக்கம்
கேட்டதனால்
கேட்டு மகிழத் தவறி விட்டோம்

பருவமழை பொழிந்துகொண்டே இருந்தது
படைத்த உயிர்களை பாதியிலே
பறித்ததனால் பாரை பண்படுத்தி பயன்பெற தவறிவிட்டோம்

இயற்கை
இயல்பாக நிறைந்திருக்கு
ரசித்து மனம் விரித்து
சிரிக்கத்தவறி விட்டோம்

அமைதி
அப்படியேதான் இருக்கிறது
யாரும் அதன் தேவைபற்றி ஆராயாமல் விட்டுவிட்டோம்

அன்பும் அழகான கலசத்தில்
அமிர்தமாக
அப்படியே இருக்கிறது
யாருக்கும் பரிமாறாமலே

சுபாரஞ்சன்