அப்பாவுக்கு வாழ்த்து !கவிதை தேனுகா.

 

நான் உலகில் உதயமாக
உயந்த உள்ளம்கொண்டவரா
உள்ளன்புகாட்டும் அப்பா

தவழ்ந்து திரியும்போது
தன்கரத்தால் எனை அணைத்து
தான் நடந்து எனை நடத்தி
தைரியம் தந்த அப்பா

தான் உணவு உண்ணும்போது
எனக்குணவு ஊட்டி எனை வளர்த்த அப்பா
தேன் சுவைக்கதை சொல்லி
தெவிட்டாத தமிழ் சொன்ன அப்பா

நான்பாடல் பாடிட
தான்சொல்லித்தந்து
இசைபோட்டு
ஊரும் உலகமும் கேட்கவைத்த அப்பா

அப்பாவின் விரல் காட்டிய பாதையில்
அன்போடு பயணிப்பதால்
இப்போதும் எப்போதும்
வெற்றியே தரும் அவர்வேதம்என்றும்
இனிய தந்தையர்தினவாழ்த்துடன்

ஆக்கம் தேனுகா தேவராசா

Merken