அமைதி..

புன்னகை
பூக்கும் இடத்தில்
வாழ்க்கை
தொடங்குகின்றது.
மெளனம்
நிலவும் இடத்தில்
மனங்கள்
துடிக்கின்றது.
நேசம்
நிலைக்கும் இடத்தில்
நினைவுகளும்
தித்திக்கின்றது.
குறைகள்
காணாத இடத்தில்
குழப்பங்கள்
குறைகின்றது.
நிறைகள்
நிறுவும் இடத்தில்
புதிய முயற்சிகள்
முளைக்கின்றது.
சலனம்
இல்லாத இடத்தில்
சபலங்கள்
கலைகின்றது.
பேராசை
முடிகின்ற இடத்தில்
சந்தோஷம்
சாமரம் வீசுகின்றது.
கவலைகள்
சூழும் இடத்தில்
உண்மை
உறவுகள் தெரிகின்றது.
கஸ்டம்
நேரிடும் இடத்தில்
நட்பின்
அருமை புரிகின்றது.
அன்பு
பெருகும் இடத்தில்
அமைதி
குடி கொள்கின்றது.
ஆக்கம் கவிஞர் ரி.தாநிதி