அம்மாவே என் தெய்வம் !கவிதை தேனுகா.

கருவறையில் எனைசுமந்தாள்
கண்விழித்து எனைக்காத்தாள்
கருவினிலும் உருவினிலும்
கண்ணாக எனை வளர்த்தாள்

திரு உருவம் அவள் ஆனாள்
திசையாவும் அவளானாள்
தெய்வத்தின் திரு உருவாய்
என் எண்ணத்தில் அவள் ஆனாள்

அம்மாவே என்கோவில்
அவள் என்றும் என்தெய்வம்
அன்னை அவள்
அனைப்பில் மகிழ்வுறுவதே
அவள் தந்தவரம் -அதனால்
அம்மாவே என் தெய்வம்

ஆக்கம் தேனுகா தேவராசா

Merken

Merken

Merken

Merken

Merken