அம்மா..

மாயங்கள்
அறியாத விந்தை.
கிறுக்கப்
படாத வரை படம்.
சாயம்
பூசிடா வெண் தாழ்.
பிரம்மன்
செதுக்கிய பொற் பாவை.
நிகரல்லா
சித்திரம்.
பத்திரமாகவே
நமை காத்த பொக்கிசம்.
இரக்கம்
சுரக்கும் வைகுண்டம்..
உண்மையின்
இலக்கணம்.
செருக்கை
கருக்கும் நெருப்பு.
தாய்மையின்
சாட்சியம்.
கட்டியம்
கூறிடும் கருணை..
தமிழின்
விசுவாசம்.
நேசம்
நிறைந்த தேச வாசம்.
சந்தோஷத்தின்
சாளரம்..
தன் விருப்புக்களை
உருக்கிய தங்கம்..
மொத்தத்தில்
இறைவன் அளித்த வரம்..
சிவயோகம்..
ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி