அரங்கமும் அதிர்வும்.100 வதுக்கான வாழ்த்துக்கள் தயாநிதி தம்பையா.

அரங்கமும் அதிர்வும்.

100 வது நிகழ்வில்..

அரங்கமும் அதிர்வும்.

100 வது நிகழ்வில்..

………………………………….

அவசர

உலகில் நேரத்தோடு

போராடும்

இக்காலத்தில்….

இயந்திரமாய்

இயங்கும் ஒரு சில

கலைஞர்கள் மத்தியில்

கணேஸ் சின்னராசா ஒரு முத்திரை..

தேச

உணர்வாளன்.ஏனைய

படைப்பாளிகளில்

பாசம் நிறைந்தவர்.

பாஷையூரின்

பைந்தமிழ் மைந்தன்..

வார்த்தைகளோடு

விளையாடும் கவிஞன்.

நாடகங்கள் கூத்து

இவற்றில் தீராத பற்றாளன்.

எழுத்தாளன்.

Sts தமிழ் தொலைக்காட்சி வழி

அரங்கமும் அதிர்வும்

எனும் நிகழ்வோடு வலம் வந்தவர்.

பல முன்னணிகளை உள்வாங்கி

பற்பல விடையங்களை அவர்களது

சொற் போரினூடாக மனித மனங்களை

மகிழவைத்தவர்..

நேற்றுப் போல் இந்த நிகழ்வின் ஆரம்பம்!

ஆனாலும் இன்று 100 வாரங்களை

எட்டி நிற்பது இமாலய சாதனை .

தோற்றுப் போகாத அவரது எண்ணங்களின் அறுவடையின் உச்சம் உள்ளம் குளிர வைக்கின்றது.

இவ்வேளையில்

இவரையும் இவரோடு பணியாற்றிய

கலை வல்லுனர்களையும்

களமும் தளமும் அமைத்துக் கொடுத்த

STs தமிழ் ஊடக இயக்குனருக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த

பாராட்டுக்களை தெரிவிப்பதில் பேரானந்தம்.

கலைப் பணி இறை பணிக்கு ஒப்பானது.

மனித மனங்களை அழகு படுத்தும் அற்புத பணி தொடரட்டும்.

நேசங்களோடும்

தயாநிதி தம்பையா.

8.09.2022.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert