**அரசியல்க்கலை**

அரிதாரம் தரித்து நாளெல்லாம்
ஆட்டம் போட்டு மிக அழகாக
அடுத்தவரை ஆனந்திக்க வைக்கும்
ஆடல் கலைஞர்கள் எங்கே,
அரிதாரமே இல்லாமல்
அநியாயங்கள் செய்து
அடுத்தவரை ஏய்த்துப்பிளைக்கும்
அரசியல் வாதிகள் எங்கே,
அரியகலைகள் இன்றோ
அருகி, கொஞ்சங்கொஞ்சமாக
அரசியல் ஆகிக்கொண்டு போகிறது.
ஆனால் அரசியலோ இன்று
அப்பட்டமான ஒரு
அருங்கலைக்கூத்தாகி விட்டது .
கலை நேசன்