அறுபடை நாயகி

கலைகளின் தாயான தெய்வமே
காத்தென்னை அருள்கின்றாய் தெய்வமே
சிலையென நின்று நீ- என்
சிந்தைக்குள் வந்து நீ
அருள்தந்து பாத்திடும் தெய்வமே

அறுபடை நாயகி
அன்னையாய் காத்தெம்மை
கண்ணுக்கு கண்ணாக காப்பவளே
கண்களில் ஒளி கொண்டு
காத்திட்ட எம்மை
காவல் தெய்வமாய்அனவளே
வேப்பிலை கொண்டு
சாத்திய படியில்
கூத்திடும் நாயகி நீதானே
வேதனை தீர்த்து
வெற்றிகள் தந்து
காத்திடும் தாயவள் நீதானே

அன்னையே உன்னை
தொழுதிட நானும்
என்ன வரம்தான் பெற்றேனே
ஆலம் தேடி உன்னடி பணிந்திட
கோடி புன்னியம் செய்தேனோ
வேப்பிலை கொண்டு
சாத்திய படியில்
கூத்திடும் நாயகி நீதானே
வேதனை தீர்த்து
வெற்றிகள் தந்து
காத்திடும் தாயவள் நீதானே

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 17.07.2021 உருவான நேரம் 02.22 மணி