அழகிய தரிசனம்..

ஆறடி ஹைக்கூ கவிதை – நீ
ஆளில்லா காட்டினில்
அழகிய தரிசனம் தரும் அருவி – நீ
கம்பன் காணாத கவிதை – நீ
வள்ளுவர் எழுதாத திருக்குறள் – நீ
பிக்காஷோ வரையாத ஓவியம் – நீ
என்னென்று சொல்வேன் உன்னழகை
பரிசென்ன தருவேன் என்னையன்றி அழகே
விடையென்ன சொல்வாய் இன்பக் கனவே..
விழிகள் வலிக்கிறது காத்திருப்பில்
விரைந்து வந்து விடைசொல்வாய்
எனைப்பிடிப்பின் …
களைந்து போகும் ஜீவனை நிறுத்து
உன் பார்வையில்….
கவலையை மறக்க. பயணிப்பேன்
உன் காதலில்..
கவித்தென்றல் ஏரூர்