**அவளின் அருகாமை**


அந்த நாளின்
அருமையான நினைவுகள்
அடிக்கடி என் மனதில் வந்து
அலைமோதுவதுண்டு…..
அன்றொரு நாள்
அந்தி சாயும் நேரம்
அடைமழை கொட்டியது மேகம் .
அடித்து வீசியது காற்றின் வேகம்
அன்று தான் நடந்தது.
அந்த சம்பவம்.
ஆண்பிள்ளைக்குரிய துடிப்போடு
ஆருமற்ற வேளையிலே_
அந்த அறைக்குள் நானும்
அறியாமல் நுழைந்து விட்டேன் .
அழகுக் குலமகள் கட்டிலில்
அங்கே தன்னந்தனியாக,
அந்த அமைதியான சூழலில்
ஆழ்ந்த உறக்கத்தில்
ஆழ்ந்திருந்ததை கண்டதும்,
ஆசை மீறவே நானும்,
அவள் அருகில் சென்று விட்டேன் .
ஆளரவம் கேட்டு சினந்து .கண்
அயர்ந்தவளோ !!! புன்னகையோடு தன்
அன்புக் கரங்களை உயர்த்தி
அங்கே என்னை எதிர்பார்த்தவளாக
அப்படியே என்னை இறுக்கி
அணைத்து கட்டிலில் கிடத்தி
அன்பொழுக முத்தமழை பொழிந்தாள் .
ஆனந்தத்தில் கூத்தாடிய எனது
ஆசை மொழிகளைக் கேட்டவாறே
அயர்ந்து மீண்டும் தூங்கி விட்டாள்.
அவளின் கதாகதப்பான
அருகாமை என்னையும்
ஆசுவாசப்படுத்தியது .
அதி காலை பணிக்கு சென்ற,
அவள் கணவன் வீடு திரும்பி
அங்கே வரும் சத்தம் கேட்டே
அசதியில் விழித்தவள்.
அவசர அவசரமாக கலைந்திருந்த
ஆடைகளை சரி செய்த வாறே
அடுப்படி நோக்கி ஓடினாள்.
ஆடி ஓய்ந்து படுத்திருந்த
ஆசாமியான என்னைக்கண்டதும்
அந்த கதாநாயகன்,
ஆசையாக ஓடி வந்து ,என்னை
அரவணைத்து அன்போடு தூக்கி
அவர் தோளில் போட்டு தட்டிக்கொண்டே
‚அம்மாவோடு குட்டித் தூக்கம்
அடிச்சியாடா என்
அன்புச்செல்லமே “’என
ஆசையோடு விசாரித்தார் .
===
அப்பா நேசன்