***அவளின் மௌனம்***

அடிக்கடி வீடு
அதிரப் பேசி
ஆயிரம் வார்த்தைகளை
அள்ளிவீசி
அறுத்துக் கொல்லும்
அம்மணிகளின் ,
அரைநொடி மௌனமானது
ஆண்களுக்கு
ஆயுள்தண்டனை
ஆகிப்போகிறது.
அவள் மனதில்
ஆயிரம் இருக்கும் .
அதை சொல்லாவிடில்
ஆருக்குப் புரியும்.
அவனவன்
அவன்பாட்டில்
அதையிதை எண்ணி
அலட்டி கொண்டு
அவனாக சிக்களுக்குள்
ஆளாகி கொள்கிறான்……
(அனுபவித்தவர்கள்
ஆதரிப்பார்கள் )
அன்பு மனைவியின்
அரைநொடி மௌனமே
ஆண்களுக்கு
ஆயுள் தண்டனை.
.
ஆதங்க நேசன்