அவுஸ்திரேலியாவில் சாதித்த இலங்கைப் பெண்!-

அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்கான உயர் விருதை இலங்கையைப் பூர்விகமாக மிச்செய்ல் டி கிரெஸ்டர் என்ற பெண் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை மெல்போனில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த விருதைப்பெறும் 3 வது பெண்ணாக கிரெஸ்டர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
சுமார் 60 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்த விருது 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.