அவைத்தென்றல் V.திலகேஸ்வரன் அயராது உழைத்து தன்‌ சொந்த நிதியில் அமைத்த யோகம்மா கலைக்கூடம் இன்று புலர்வானது

அவைத்தென்றல் V.திலகேஸ்வரன்
எனும் பெயர் உடையான்
அன்னையின் நினைவாக
கலைப்பணி செய்ய எண்ணி
புலத்தினிலே வாழ்ந்து கொண்டு
முல்லைத்தீவில்உருவான
யோகம்மா கலைக்கூடம் தனை
அயராது உழைத்து
தன்‌ சொந்த நிதியில்
அமைத்த யோகம்மா கலைக்கூடம்
கலை வளர்க்கஅமைத்து வைத்த
நல் ஒலிக்கூடம்
சிறந்தோங்க வாழ்த்துவோம்

கலைஞர்கள் மேம்படவும்
கலை வளம் உயர்ந்திடவும்
கலைஞர் குமாரு யோகேஸ் நெறியாள
முல்லையில் இருந்து முளங்கட்டும் நற் கீதங்கள்

எண்ணத்தை கருவாக்கி
இனிய கலைக்கூடமமைத்த
முல்லை மண் தந்த
வ. திலகேஸ்வரன் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு
உறு துணையாக நின்றுழைக்கும்
உயரிய செய்பாட்டுக் கலைஞர்
குமாரு யோகேஸ் அவர்கள்
வ. திலகேஸ்வரன்
எண்ணம் நிறைவேற
இனிய படைப்புக்களை – இனி
முல்லையில் இருந்து தரும்
யோகம்மா கலைக்கூடம்
எமது கலைஞர்களுக்கு ஒலி க்கூமாய்
ஒளிவீச ஒலிவீச உலகெல்லம் கேட்கட்டும் என வழ்த்துகின்றோம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

STSதமிழ்Tv‌