ஆதாரங்கள்.கவிதை கவிஞர்தயாநிதி

உள்ளத்தை
உருக்கும்
உயிர்ப்பின்
தேடலிவன்.

இழப்பின்
உச்சம்.பிரிவின்
துயரம் எதுவென
இவனிடம் கேளுங்கள்.

கேட்பதென்ன
பார்த்ததிலேயே
புரிதலன்றோ…
அனர்த்தங்கள்.

ஒரு நாட்டின்
போர் முடிவின்
எச்சங்கள் இவர்கள்..

மிச்சம் என
கூட்டிக் கழித்தலில்
சேதாரங்கள்…

ஆதாரங்களில்லாத
இன உற்பதி.
பூகோளப் பரப்பெங்கனும்
பாலியலின் அவசர
அறுவடைகளிவர்கள்..

.ஆக்கம் கவிஞர்தயாநிதி