ஆயிரம் கவிதைகளை தொகுப்பு வெளியிட்டில் குமாரு. யோகேஸ் உள்பட பலர்கலந்துசிறப்பித்தனர்

கவிதைத் தொகுப்பால் கின்னஸ் சாதனை படைக்கும் முதல் தமிழன்..

தாயகம் வன்னிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர், வடக்கு மாகாண சபையின் கவிஞர் விருது பெற்றவர் முன்னாள் போராளியான யோ. புரட்சி இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு புதிய வரலாறை எழுதியுள்ளார்

அவரால் தொகுக்கப்பட்ட 1000 யிரம் கவிஞர்களின் கவிதை நூல் இன்நு வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது
இன்று வீரசிங்கம் மண்டபம் பெருவிழா பூணுடுள்ளது இதில் குமாரு. யோகேஸ் உள்பட பலகலைஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள்
கலந்து சிறப்பித்தனர்
இது வெற்றி..
இது மகத்துவம்..
இது மாபெரும் செயல்..
இது தமிழனுக்கு மீண்டும் ஒரு தலை நிமிர்வு..
இது கம்பன் இளங்கோ பாரதி வரிசையில் ஓர் ஈழத்தமிழனும் இடம் பிடிக்கும் இனிய திருநாள்.
வானத்தில் தேவர்கள் பூமாரி பொழிவது உண்மையானால் நாளை வானத்தில் இருந்து தமிழ் பெரும் புலவர்கள் எல்லாம் யாழ் மண்ணில் மலர்மாரி பொழிந்ததினமாகும். இதுபற்றிய மேலதிகதகவல்கள் வரும் பதிவுகளில் இணைக்கப்படும்