ஆராதிக்கலாம்..


சிலையாய்
தோன்றும்
நிலையழகினை
செப்பவா….

கலைாயால்
கட்டுண்ட
கலையழகை
செப்பவா….

உனை
செதுக்கிய
சிப்பியை
போற்றவா…

முத்திரையில்
ஒப்புவிக்கும்
வித்துவத்தை
விளக்கவா…

உன்
பயிற்சியின்
பூர்த்தியில்
நேர்த்தியல்லவா..

ஒப்பனை
ஒப்புக்கும்
இல்லாத
இலக்கணம் நீ..

பார்த்ததும்
பாராட்ட நினைத்து
பிறந்த வரிகளால்
ஆராதிக்கின்றேன்
வாழிய நீ வாழியவே..