ஆர்வலன்…

ரி ஆர் ரி தமிழ்
ஒலியில் அறிவிப்பாளனாய்
அறிமுகம்.
பிரான்ஸ் நேர
தயாரிப்பாளனாய்
கை கோர்த்தார்
அருள் மொழித் தேவனாய்..

ஒலிப்பதிவாளனாய்
நடிகனாய் வளர்ச்சி
காலம் செல்ல
ஏ பி சி வானொலியில்
செய்தியாளராய்
தாயகப் பாடல்ளை
மையப்படுத்தி உணர்வான
நிகழ்ச்சிகளை தந்தார்..

ஓரிரு மேடைகளில்
நடிகனாய்
தோன்றி மறைந்தார்
வானொலி நாடகங்களில்
முக்கிய பாத்திரங்களில்
துலங்கினார்.
இசைக் குழுக்களில்
நிரந்தர அறிவிப்பாளரானார்
தியாகி திலீபனாக பாத்திரம்
ஏற்று மனங்களில் வாழ்ந்தார்.
தேச பக்தி நிறைந்தவர்
பிரான்ஸ் புணர்வாழ்வு கழகத்தின்
அங்கத்தவனாகி பிரதான
அறிவிப்பாளனுமாவார்.

அன்பானவர்
அமைதியானவர்
அதனால் தனோ இவர்
குரலிலும் இனிமையும்
அமைதியும் அதிகமுண்டு.
ஊடகங்கள் ஊக்கம் கொடுத்தால்
உணர்வான நிகழ்ச்சிகள்
உண்மையில் கிடைக்கும்.
வாழும் போதே இவர்களையும்
வாழ்த்துவோம் வாரீர்…