ஆளுக்கொரு அறை!கவிதை ஜெசுதா யோ

ஓலைக் குடிசைக்குள்
மிதமாக இருந்த அன்பு
ஓட்டு வீட்டில்
உடைந்தே போனது
ஆளுக்கொரு அறை
அருகில் யாருமில்லை

குளிர்ந்தால் இதமான சூட்டில்
கீற்றர் அருகிருந்தது
வெயிலுக்கு சூடு தணிக்கா
குளிரூட்டியும் பக்கம் இருக்கிறது

ஆனால்
கதைசொல்ல
அம்மாவும் அருகில்லை
அடிபட்டு விளையாட
அண்ணன் தங்கைகளும்
அருகில்லை
சந்தோசமும் அருகில்லை
நிம்மதியும் எங்களுக்கு
அருகிலில்லை

தொலைவாகிப் போன சொந்தம்
தொலைந்து போன பாச பந்தங்கள்
அன்பும் போலியானது
பணத்தின் அளவுகோலானது
எல்லாம் இருந்தும்
இன்பம் இன்றிப் போனது
பணம் பணம் என ஓடியதால்
மனதளவில் பிணமாகிப் போனான்
மனிதனும் இங்கே ..

எல்லாம் இருப்பது போல
ஒரு மாயைத் தொற்றம்
ஆனால் எதுவும் இல்லாது
வெறுமையில் தான்
வாழ்கிறோம்…..

_  ஆக்கம் ஜெசுதா யோ