இசை மாருதம்-2017.!! 22.10.2017 பாரிஸ் நகரில்

இசை மாருதம்-2017.!! பாரிஸ் நகரில் பல ஆண்டுகளாக ,இசை பொழிந்துவரும் நயினை கரோக்கே இசைக்குழுவினர்,எதிர்வரும் 22.10.2017 பி.ப.3.00 மணிக்கு இசைமாருதம் எனும்,மாபெரும் இசை நிகழ்வொன்றினை ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து நடாத்துகின்றனர்.பல்சுவைக் கலைக்தம்பமாக, இடம்பெறும் இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்.அழைக்கின்றார்கள்.நயினை சிவா பாரம்பரியக் கலைக்குடும்பத்தைச்சேர்ந்தவர்.இவரது நெருங்கிய உறவினர்கள்,எம்மோடு 60-79 களில்,பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்கள்.இசைஞானமும்,கலையுணர்வும் மிக்க நயினை சிவாவை வாழ்த்துவதோடு, அவரோடிணைந்த கலைஞர்க்ளையும் பாராட்டுகின்றேன் !! பாரீஸ் வாழ் நயினை உறவுகளும் திரண்டுவந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஐரோப்பாவிலேயே ஈழத்து முத்தான கலைஞர்களால் நிரம்பி வழியும் பாரீஸ் வாழும் கலைஞர்கள் அனைவரையும் நானும் அன்றைய தினம் அந்த மேடையில் சந்திக்கப் போவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.அனைவரும் வாருங்கள்.கலைஞர்களோடு சந்திப்போம்!!!!