இணுவையூரான்

வேரை
அறுத்தவரும்
ஊரைத்
தொலைத்தவரும்
ஊரைக்
காத்தவர் பேரை
மறந்தவரும்
வாழும்
இக் காலத்தில்
தன் ஊரின்
பேரையும்
தன் பெயரில்
ஒட்ட வைத்து
சுமக்கும் உணர்ச்சிக்
கவிஞன் இணுவையூர்
சக்திதாசன்.

மண்ணையும்
மக்களையும்
புலம் பெயர்ந்தோர்
வலிகளையும்
நாளாந்தம் கவியால்
வடிக்கும் கவிதாசன்.
இவனும் சிறந்த
நடிகன் இயக்குனன்.
டென்மார்க்கில்
அரங்கம் பல கண்டவன்.

கோவில்
தொண்டன்.அவசர
காலங்களில்
அறிவிப்பாளனுமாவான்.
கவிதை நூல்கள்
பாடல் இசைத் தட்டுக்கள்
பலவற்றை பிரசவித்தவன்.

ஆற்றல் பல
நிறைந்தவன்.
இலைமறை காயாக
இருக்கின்றான்.
பற்றாளர்கள்
பாராமுகமாக இருப்பதும்
கவலையே…வாழும்
காலங்களில் எம்மோடு
வாழும் கலைஞர்களையும்
நான் சென்ற நாடுகளில்
தரசித்த கலைஞர்களையும்
நினைவிலிருத்தி
இன்பம் காண்கின்றேன்.
வாருங்கள் இவர்களை
நிறைவாக வாழ்த்துவோம்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி