இணைகரங்கள்.


பிறப்பினாலும்
உறுப்பினாலும்
ஒன்றாகி நன்றாகி
மனிதனாக பிறந்து
நிற வகுப்பாலும்
மொழியாலும்
பாகுபாடாகி படும் படுகள்..
பெரும்பாடுகளே….!
ஐந்தறிவு
ஜீவராசிகள்
தம்மை தாம்
அழித்ததில்லை
நிறவெறியுடன்
அலைந்ததில்லை..
ஆறு அறிவு
ஆற்றல் நாயகர்கள்
ஆடும் ஆட்டங்கள்
அழிவின் உச்சத்தில்..
வல்லரசு தாமென
தம்பட்டமடித்த
அமெரிக்கன் ஆட்டம்
இழக்கின்றான்…
கொள்ளை
அழகாம் வெள்ளை மாளிகை
சுற்றி வளைப்பில்
முற்றுகை போர்
கதவுகளையும்
மன சாட்சி கதவுகளையும்
உடைப்பதை
காண்கின்றோம்..
வினை வினையறுக்கும்
படலம் ஆரம்பம்.
நேற்று இன்று நாளை
மாற்றங்கள்
விதி விலக்கல்ல
விழித்தால் விடிவுண்டு….

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி